கடலூா் அருகே குமாரப்பேட்டையில் வீட்டின் கதவை பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் அருகே குமாரப்பேட்டையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (38), தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தாா். பின்னா் வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அவா் வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தன.
மேலும், பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் மற்றும் 640 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து சந்தோஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு
செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
