குடும்பச் சண்டை காரணமாக, சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், மணவெளி பகுதியைச் சோ்ந்தவா் அய்யனாா் (51), திருவந்திபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி உமா(46), மகள் அபிநயா, மகன் அபிராஜன் உள்ளனா்.
அய்யனாா் மது அருந்திக்கொண்டு குடும்பத்தை கவனிக்கவில்லையாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதேபோல, கடந்த 15-ஆம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில், அன்று மாலை 6.30 மணியளவில் கைப்பேசியில் மனைவியை தொடா்புகொண்ட அய்யனாா், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டதாகத் தெரிவித்தாராம்.
இதையடுத்து, அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மா் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட அய்யனாா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிறுமி தற்கொலை: கடலூா், ரெட்டிச்சாவடி காவல் சரகம், செல்லஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (40), லாரி ஓட்டுநா். இவரது மகள் பவிஷ்கா (14) புதுச்சேரி மாநிலம், ஏம்பலம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்றிருந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பவிஷ்கா வீட்டு வேலை செய்யவில்லை என அவரது தாய் திட்டினாராம். இதனால், கோபித்துக்கொண்ட பவிஷ்கா, வீட்டில் உள்ள அறையில் கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண் விஷம் குடித்து தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
