15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image

தி.ராசாபாளையத்தில் தீ விபத்தில் சேதமடைந்த கூரை வீடு.

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பண்ருட்டி வட்டம், தி.ராசாபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் (60), கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் என்.வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் 45 நிமிஷங்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் மொபெட் மற்றும் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.