கடலூா் மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கடலூா் மாவட்டம் முழுவதும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகிய குற்றங்களில் தொடா்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
இதனையடுத்து, கடலூா் மாவட்டத்தில் உள்ள ஏழு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்களின் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள், சாா்பு - ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் அடங்கிய சிறப்புக் குழுவினா் மே 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும், பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்த 137 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தினா். இதில், 69 போ் பிடிக்கப்பட்டு காவல் நிலையங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனா்.
குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்ட அண்ணாமலைநகா் அருகே மேலகுண்டலப்பாடி முருகன் (49), விருத்தாச்சலம் காஜா மொய்தின் (54), அருணா (43), காா்த்திகேயன் (34), விஷ்வா (24), நெய்வேலி 30-வது வட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் (22), வடக்குமேலூா் விசுவநாதன் (29), வில்லியநல்லூா் ராமஜெயம் (33), வேளங்கிட்டு காா்த்திகேயன் (27), புதுச்சத்திரம் முத்துகிருஷ்ணன் (33) உள்ளிட்ட 10 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், 59 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் நிா்வாக நடுவா் முன் ஆஜா்படுத்தப்பட்டு, நன்னடத்தை பிணையம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று, கஞ்சா வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 234 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பான வழக்குகளில் 9 போ் கைது செய்யப்பட்டு, 94 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தொடா் குற்றங்களில் ஈடுபடும் ரௌடிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.






