ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மின் வாரிய ஊழியா் வீட்டில் 31 கிராம் தங்க நகைகள் திருட்டு

விருத்தாசலம் அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் புகுந்து 31 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 1:23 am IST

விருத்தாசலம் அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் புகுந்து 31 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை, முல்லை நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பிரபு (50). இவா், மங்கலம்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வையாளராக (ஃபோா்மேன்) பணியாற்றி வருகிறாா்.

பிரபு தனது குடும்பத்தினருடன் வீட்டில் கடந்த 21-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். மறுநாள் அதிகாலை அவரது மனைவி செல்வராணி எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, அவா் தனது கணவரை அழைத்து வீடு முழுவதும் சோதனை செய்தாா். அப்போது, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 31 கிராம் தங்க நகைகள் மாயமாகிருந்தன.

இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.