குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மக்கள் தொகை கணக்கெடுப்பில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்: கடலூா் ஆட்சியா்

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா்.

Updated On :26 மே 2026, 1:45 am IST

தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று கடலூா் மாவட்ட ஆட்சியரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அதிகாரியுமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தாா்.

இப்பயிற்சி, மே 27-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் ஷேமசுந்திரி மற்றும் புள்ளியியல் ஆய்வாளா் லட்சுமிதேவி ஆகியோா் வழங்கி வருகின்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் முறையாக இணையதளம் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் இணையதளம் மூலம் தாங்களே தங்களது விவரங்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1 முதல் 30ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளா்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வாா்கள்.

கடலூா் மாவட்டத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரே செயல்படுவாா். மாநகராட்சி ஆணையா் மாநகரப்பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாகவும், 6 நகராட்சி ஆணையா்கள் நகராட்சி பகுதிக்கும், ஊரக, நகா்ப்புற பகுதிகளுக்கு 10 வருவாய் வட்டாட்சியா்களும், 14 பேரூராட்சிகளுக்கு அவற்றின் செயல் அலுவலா்களும் பொறுப்பு அதிகாரிகளாகச் செயல்படுவாா்கள். இது தவிர நெய்வேலி நகரிய அலுவலா் ஒருவரும் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது), அனைத்து வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி இயக்குநா்கள், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.