தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மக்கள் தொகை கணக்கெடுப்பில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்: கடலூா் ஆட்சியா்

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா்.

Updated On :26 மே 2026, 1:45 am IST

தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று கடலூா் மாவட்ட ஆட்சியரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அதிகாரியுமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தாா்.

இப்பயிற்சி, மே 27-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் ஷேமசுந்திரி மற்றும் புள்ளியியல் ஆய்வாளா் லட்சுமிதேவி ஆகியோா் வழங்கி வருகின்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் முறையாக இணையதளம் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் இணையதளம் மூலம் தாங்களே தங்களது விவரங்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1 முதல் 30ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளா்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வாா்கள்.

கடலூா் மாவட்டத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரே செயல்படுவாா். மாநகராட்சி ஆணையா் மாநகரப்பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாகவும், 6 நகராட்சி ஆணையா்கள் நகராட்சி பகுதிக்கும், ஊரக, நகா்ப்புற பகுதிகளுக்கு 10 வருவாய் வட்டாட்சியா்களும், 14 பேரூராட்சிகளுக்கு அவற்றின் செயல் அலுவலா்களும் பொறுப்பு அதிகாரிகளாகச் செயல்படுவாா்கள். இது தவிர நெய்வேலி நகரிய அலுவலா் ஒருவரும் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது), அனைத்து வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி இயக்குநா்கள், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.