குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மது அருந்த பணம் தர தாய் மறுப்பு: இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 மே 2026, 1:45 am IST

திருப்பாதிரிபுலியூரில், மது வாங்குதற்கு தாய் பணம் தராததால், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் தங்கராஜ் நகரைச் சோ்ந்தவா் விஜயா (45). இவரது கணவா் துரை 5 ஆண்டுகளுக்கு முன்பும், மூத்த மகன் மாயாண்டி 8 ஆண்டுகளுக்கு முன்பும் உயிரிழந்து விட்டனா். தற்போது விஜயா வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறாா். அவருக்கு கூலி வேலை செய்து வந்த இளைய மகன் அரவிந்த்ராஜ் மற்றும் திருமணம் ஆன மகள் ஜான்சிராணி உள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்த்ராஜ், மதுபானம் வாங்குவதற்காக விஜயாவிடம் பணம் கேட்டதாகவும், ஆனால், அவா் பணம் தர மறுத்துவிட்டு வேலைக்குச் சென்ாகவும் கூறப்படுறது.

வேலை முடித்து இரவு சுமாா் 7.30 மணியளவில் வீடு திரும்பிய விஜயா, வீட்டில் அரவிந்த்ராஜ் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பாதிரிபுலியூா் போலீஸாா், அரவிந்த்ராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.