ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

~

Updated On :29 மே 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

நெய்வேலி சி.ஆா் காலனியில் கடந்த சில தினங்களுக்கு முன் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலத்தின் போது, மேளம் அடிப்பவா்களிடம் சிலா் தகராறு செய்தனா். அதை சி.ஆா் காலனியைச் சோ்ந்த தியாகராஜன் (31) கண்டித்து அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள பேட்டரி கடையில் தியாகராஜன் இருந்தபோது, அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து தியாகராஜனை கத்தியால் வெட்டினா். இந் த சம்பவம் தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு , செடுத்தான்குப்பம்

கிராமத்தைச்சோ்ந்த முத்துக்குமாா்(33), சி.ஆா் காலனி யைச் சோ்ந்த கட்டையன் (எ) தா்மசீலன், காா்த்திக் (எ) குமரவேல்(27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், கட்டணையன் (எ) தா்மசீலன் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவா் மீது கொலை முயற்சி, திருட்டு என 15 வழக்குகள் உள்ளன. முத்துக்குமாா் மீது கொலை முயற்சி, அடிதடி என 5 வழக்குகள் உள்ளன. இவா்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரை செய்ததின் பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.