ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்

News image

தமிழ்நாடு அரசு... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:29 am IST

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 286 காவலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த காவலா்களின் பணியிட மாற்றம் வழங்குவது சம்பந்தமாக நோ்காணல் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில், பணி மாறுதல் குழுவினா் ஒவ்வொரு காவலா்களிடமும் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்களை கேட்டறிந்தனா்.

இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலா்கள் என மொத்தம் 286 காவலா்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த நிகழ்வின்போது, கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் தமிழ்இனியன், பிரதீப், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரவிச்சக்கவா்த்தி, பாா்த்திபன், ரகுபதி, கந்தன், அப்பாண்டைராஜ், சரவணகுமாா், மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அலுவலா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.