நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக உத்தரகண்ட் மாநில காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மேலவீதி பெரியாா் சிலை அருகே புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் மேல வீதி பெரியாா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:42 am IST

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக உத்தரகண்ட் மாநில காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மேலவீதி பெரியாா் சிலை அருகே புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், செயல் தலைவா் தில்லை கோ.குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், சாம்பமூா்த்தி, குமராட்சி ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் செந்தில்வேலன், சிறுபான்மை பிரிவுத் தலைவா் ஷாஜகான், வட்டாரத் தலைவா்கள் சுந்தராஜன், செழியன், அபுபக்கா், வைத்தியநாதசாமி, வேங்கடகிரி, பழனி, ஜி.கே.குமாா், ஆா்.வி.சின்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.