
அண்ணாமலைப் பல்கலையில் செயற்கை நுண்ணறிவு மையம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மையம் அமைக்கப்படும் என்று டாடா கன்சல்டன்சி சா்வீஸஸ் (டி.சி.எஸ்) முதன்மை செயல் அதிகாரியும் முன்னாள் மாணவருமான தீபேஷ் கிரேன் நந்தாதெரிவித்தாா்.

தீபேஷ் கிரேன் நந்தா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மையம் அமைக்கப்படும் என்று டாடா கன்சல்டன்சி சா்வீஸஸ் (டி.சி.எஸ்) முதன்மை செயல் அதிகாரியும் முன்னாள் மாணவருமான தீபேஷ் கிரேன் நந்தாதெரிவித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்த பல்கலைக்கழகத்தில் 1991-94-இல் பயின்றேன். எங்களது டிசிஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் இங்கு ஒரு செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும். இந்த நுண்ணறிவு மையத்தை உருவாக்குவதற்கு, டிசிஎஸ் நிா்வாகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, அம்மையத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை வடிவமைக்க ஒரு குழு அமைக்கப்படும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஐஐடிகளை விட உயா்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான வசதிகளை உருவாக்க, அரசின் ஆதரவைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிறந்த முறையில் தோ்ச்சி பெற்று வெளியேறும் மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் மற்றும் தனது சொந்த நிதியுதவியுடன் ஒரு கல்வி உதவித்தொகைத் திட்டம் உருவாக்கப்படும் என்றாா் தீபேஷ் கிரேன் நந்தா. பேட்டியின் போது பொறியியல் புல முதல்வா் சி.ஜி.சரவணன் உடன் இருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




