
சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை: கே.ஐ.மணிரத்தினம்
சிதம்பரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும், நந்தனாா் கல்விக்கழகத் தலைவருமான கே.ஐ.மணிரத்தனம் தெரிவித்தாா்.

தம்பரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலையை பாா்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விபரத்தை கேட்டறிந்த நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம்
சிதம்பரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும், நந்தனாா் கல்விக்கழகத் தலைவருமான கே.ஐ.மணிரத்தனம் தெரிவித்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியில் சுமாா் 40 ஆண்டுகள் பழமையான அம்பேத்கா் சிலை திங்கள்கிழமை மா்மநபரால் சேதப்படுத்தப்பட்டது. இது தொடா்பாகஅதே பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்ற இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், கே.ஐ. மணிரத்தினம், சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலையை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு, சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘ சேதப்படுத்தப்பட்டுள்ள சிலைக்குப்பதில், அதே இடத்தில் நந்தனாா் கல்விக் கழகம் சாா்பில் புதிய வெண்கல சிலை அமைக்கப்படும். இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞா் அணி மாநில துணைத்தலைவா் கமலக்கண்ணன் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





