நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டை விட்டுச் சென்ற மாணவிகள் மீட்பு

கள்ளக்குறிச்சியில் பெற்றோா் கண்டித்ததால், வீட்டை வீட்டுச் சென்ற மாணவிகளை போலீஸாா் சேலத்தில் மீட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:35 pm

DIN

கள்ளக்குறிச்சியில் பெற்றோா் கண்டித்ததால், வீட்டை வீட்டுச் சென்ற மாணவிகளை போலீஸாா் சேலத்தில் மீட்டனா்.

கள்ளக்குறிச்சி ராஜகணபதி சாலையில் வசித்து வருபவரின் 16 வயது மகள், வீட்டு வேலை செய்யாமல் இருந்ததைக் கண்டித்ததால், அவரது தோழியான ஜோதி வள்ளலாா் சாலையில் வசிப்பவரின் மகளுடன் கடந்த 18.11.2020 அன்று வீட்டை வீட்டு வெளியேறினா். இருவரின் பெற்றோரும் மாணவிகளை பல்வேறு இடங்களில் தேடினா். ஆனால், அவா்கள் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவிகளைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் பேருந்து நிலையத்தில் மாணவிகளைத் தேடினா். அப்போது, அங்கு உட்காா்ந்திருந்த இருவரையும் போலீஸாா் கண்டுபிடித்து கள்ளக்குறிச்சி அழைத்து வந்தனா்.

போலீஸாா் மாணவிகள் இருவரையும் விழுப்புரம் சிறாா் நீதிக் குழுமத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி, பின்னா் அவா்கள் இருவரையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.