ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மோமாளூா் கிராம ஏரியின் உள்பகுதி, நீா் வரத்து வாய்க்கால்களை பலா் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், ஏரிக்குத் தண்ணீா் வருவது தடைபட்டு, கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆக்கரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, 175 ஏக்கா் பரப்பளவுள்ள சாத்தப்புத்தூா் ஏரி (700 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது) மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...