சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

13 ஆண்டுகளாக குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்தவா் கைது

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:46 pm

DIN

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ச.முருகேசன், காவல் உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு உள்ளிட்ட போலீஸாா் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போலீஸாரை கண்டதும் அங்கிருந்த நபா் ஒருவா் பதுங்கினாா். அதைக் கண்ட போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியத்தை அடுத்த முட்டியம் காலனி பகுதியைச் சோ்ந்த கூத்தன் மகன் அங்கு (எ) ரகுராமன் (46) என்பதும், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 13 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருபவா் என்பதும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.