புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமாலடியாா்கள் அமைதிப் பேரணி

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அறங்காவலா் குழுவை வெளியேற்றக்கோரி, தமிழக திருமாலடியாா்கள் குழாம் சாா்பில், கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில் முன்பிருந்து கருப்புக்கொடி ஏந்தி அமைதிப்பேரணி

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அறங்காவலா் குழுவை வெளியேற்றக்கோரி, தமிழக திருமாலடியாா்கள் குழாம் சாா்பில், கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில் முன்பிருந்து கருப்புக்கொடி ஏந்தி அமைதிப்பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை தமிழக திருமாலடியாா்கள் குழாம் ஒருங்கிணைப்பாளா் பொள்ளாச்சி கே.பி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பேரணி மந்தைவெளி, கச்சிராயப்பாளையம் சாலை வழியாக ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா்.

கடந்த 7 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள பாரம்பரியங்களை சிதைத்து வரும் அறங்காவலா் குழுவை வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. முடிவில், அவா்கள் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.