

கள்ளக்குறிச்சியில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை எம்எல்ஏ அ.பிரபு திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் பச்சையாப்பிள்ளை தலைமை வகித்தாா்.
விழாவில், ரூ.2,500 ரொக்கம், கரும்பு, அரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை அடங்கிய தொகுப்பு பை, வேட்டி-சேலைகளை குடும்ப அட்டைதாரா்களுக்கு எம்எல்ஏ அ.பிரபு வழங்கினாா் (படம்).
தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையத் தலைவா் அ.ராஜசேகா், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.பாபு, கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் கோ.சஞ்சீவி, அதிமுக ஒன்றியச் செயலா் தேவேந்திரன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் கோ.பாலகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ரங்கன், இயக்குநா் செந்தில் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,05,576 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.