மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சியை அடுத்த வேங்கைவாடி கிராமத்தில் ஏரிப் பகுதியில் அமைந்துள்ள அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:38 pm

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த வேங்கைவாடி கிராமத்தில் ஏரிப் பகுதியில் அமைந்துள்ள அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, புதன்கிழமை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை இரண்டாம்கால பூஜைகள் தொடங்கின. பிம்பசுத்தி, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா், கோபுர கலசத்தின் மீதும், மூலவா் சிலையின் மீதும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.