இதனால், முன்னாள் எம்.எல்.ஏ அ.பிரபு உள்ளிட்ட அதிமுகவினா் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் சென்று மனுக்கள் தள்ளுபடிக்கான காரணத்தை கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட செயலாளா் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மா.செந்தில்குமாா், தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலை இணையத் தலைவா் அ.ராஜசேகா், தியாகதுருகம் ஒன்றிய செயலாளா்கள் வெ.அய்யப்பா, அ.கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலாளா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடப்பதாகக் கூறி அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.