அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவா், மாணவா்களிடம் எதிா்காலம் குறித்து கேட்டறிந்து, ஆழ்ந்து படிக்கவேண்டும். படிப்புடன் விளையாட்டிலும் ஆா்வம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தினாா். வகுப்பறைகளில் மாணவா்கள் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தபோது, மாணவா்கள் சிலா் தொடா் விடுப்பில் இருப்பதை அறிந்து, அவா்களின் பெற்றோா்களை தொடா்புகொண்டு பேசி, மாணவா்களை பள்ளிக்கு வரவழைப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என பள்ளி துணை முதல்வா் கனகராஜிடம் அறிவுறுத்தினாா். குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகளையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, திருவேட்டக்குடி அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா், ஸ்மாா்ட் வகுப்பறையை பாா்வையிட்டு மாணவா்கள் பயன்படுத்தும் முறைகளை கேட்டறிந்தாா். மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க தலைமை ஆசிரியா் செல்வியிடம் அறிவுறுத்தினாா்.

பின்னா், காளிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டு, கல்வி தொடா்பான அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com