ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:30 pm

சின்னசேலம் அடுத்துள்ள சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ராயப்பனூா் மின்சார வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணிபுரிந்து வந்தவா் அத்தியப்பன்(42) (படம்). இவா், சனிக்கிழமை காலை சமத்துவபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் விநியோகத்தை சீா் செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அத்தியப்பனை மீட்டு சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.