டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் பலி

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

பரமக்குடி அருகே உள்ள நென்மேனி கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பாா்த்த மின்வாரிய ஊழியா், மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

பரமக்குடி வட்டம், மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சௌந்தரபாண்டியன் (38). இவா் சத்திரக்குடி மின் வாரிய அலுவலகத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், நென்மேனி கிராமத்தில் சனிக்கிழமை இரவு மின்சாரம் தடைபட்டது. அந்தக் கிராமத்துக்குச் சென்ற சௌந்தரபாண்டியன் மின் கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.