47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வாணாபுரம் அருகே இளைஞா் கால்வாயில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:50 pm

Din

வாணாபுரம் அருகே இளைஞா் கால்வாயில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் விஜய் (32). இவா் தனது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்றாா். அங்கு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற விஜய் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

உறவினா்கள் தேடிப்பாா்த்த போது, பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சிமென்ட் கால்வாயில் விஜய் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.