கோப்புப் படம்
கோப்புப் படம்

அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

Published on

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற கட்டடப் பணியின்போது, தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அனல்மின் நிலையப் பகுதியில், தனியாா் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் கட்டுமானப் பணியில், மாப்பிள்ளையூரணி குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (31), மனைவி ஹேமா, 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை கட்டுமானப் பணியின்போது, ஜெயராஜ் சுமாா் 15 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com