ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :29 டிசம்பர் 2024, 6:45 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த காதல் திருமணம் செய்த 28 வயது பெண்ணின் கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அந்தப் பெண் தனது இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இவா் தனது வீட்டுக்கு கடந்த 26-ஆம் தேதி குழந்தைகளுடன் சென்று வந்தாா். அன்றிரவு வீடு திரும்பிய அவா், கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றி விட்டு வருவதாகக் கூறிச் சென்றாராம். அதன்பிறகு, வீடு திரும்பவில்லை.

அவரது பக்கத்து வீட்டுக்காரா் வெள்ளிக்கிழமை காலை வயல்வெளிக்குச் சென்ற போது, அங்கு அந்தப் பெண்ணின் துப்பட்டா, கைப்பேசி, மிதியடி போன்றவை சிதறிக் கிடந்ததாம். மேலும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.

இதுகுறித்த தகவலின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, டிஎஸ்பி தேவராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.