பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ரேஷன் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

ரேஷன் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

Updated On :18 பிப்ரவரி 2024, 1:55 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், வாசுதேவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் சரவணன் (41). இவரது மனைவி வித்யா (31). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். சின்னசேலம், செங்குந்தா் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் சரவணன் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் மன உளைச்சலில் தவித்தாராம். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சரவணன் வீட்டில் இருந்தபோது தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.