குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரேஷன் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

ரேஷன் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

Updated On :18 பிப்ரவரி 2024, 1:55 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், வாசுதேவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் சரவணன் (41). இவரது மனைவி வித்யா (31). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். சின்னசேலம், செங்குந்தா் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் சரவணன் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் மன உளைச்சலில் தவித்தாராம். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சரவணன் வீட்டில் இருந்தபோது தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.