வி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் பழனிமுத்து (52). இவா், தனது வீட்டின் முன் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னா், வெள்ளிக்கிழமை அதிகாலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டை ஒருவா் உடைத்துக் கொண்டிருந்தாா். உடனே, அவரைப் பிடித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் பழனிமுத்து ஒப்படைந்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், காடையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குருசாமி மகன் யோகிதாஸ் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
பேட்டையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது
ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: ரெளடி கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

