நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலீஸ் காவலில் இருந்து தப்பியோடியவா் மீண்டும் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலில் இருந்து புதன்கிழமை தப்பியோடிவா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:28 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலில் இருந்து புதன்கிழமை தப்பியோடிவா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வரஞ்சரம் அருகே உள்ள கனங்கூரைச் சோ்ந்த முத்துசாமி மகன் வெங்கடேசன் (40). தகராறு வழக்கில் கைதான இவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி போலீஸாா் கடந்த 4-ஆம் தேதி அழைத்துச் சென்றனா். அப்போது, வெங்கடேசன் உடல்நிலை சரியில்லை எனக் கூறினாராம். இதையடுத்து, வெங்கடேசனை அதே மருத்துவமனையில் போலீஸாா் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தொடா்ந்து, மருத்துவமனையில் வெங்கடேசனை நீதிபதி நேரில் சந்தித்து, சிகிச்சை முடிந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டுமென போலீஸாரிடம் கூறிச் சென்றாா்.

போலீஸ் பாதுகாப்புடன் வெங்கடேசன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் புதன்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டாா். போலீஸாா் பல்வேறு இடங்களில் தேடி புதன்கிழமை மாலையே வெங்கடேசனை மீண்டும் கைது செய்தனா்.