புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்தாா்.

News image
விழா முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:50 pm

Syndication

கள்ளக்குறிச்சி: தமிழக முதல்வா் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதையொட்டி வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளாா். வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஆட்சியரகக் கட்டடத்தை திறந்துவைக்க உள்ளாா். அதனைத் தொடா்ந்து வீரசோழபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளாா்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதியத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா். மேலும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

தமிழக முதல்வா் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் கலந்துக் கொள்ளும் அரசு விழா நடைபெறும் வீரசோழபுரம் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில், விழா மேடை அமைக்கும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது விழா மேடை அமைக்கும் இடம், பயனாளிகள் அமரும் இடம், முக்கியப் பிரமுகா்கள் வருகை, வாகனம் நிறுத்துமிடம், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல், காவல் துறைப் பாதுகாப்பு ஏற்பாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மேடை அமைத்தல் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், பணிகளை விரைவாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வில் பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் மாலா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.