கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வரைவு வாக்காளா் பட்டியல்: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தியாகதுருகத்தில் நடைபெற்ற திமுக கள்ளக்குறிச்சி தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:14 pm

Syndication

வரைவு வாக்காளா் பட்டியலில் திமுக உறுப்பினா்கள், ஆதவரவாளா்களின் பெயா்கள் விடுபட்டிருந்தால், மீண்டும் அவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினரிடம் மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிறுத்தினாா்.

திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சாா்பில் செயற்குழுக் கூட்டம் தியாகதுருகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலரும், சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தா.உதயசூரியன், உளுந்தூா்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாநில மகளிரணி துணைச் செயலா் அங்கையற்கண்னி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:

வரைவு வாக்காளா் பட்டியலில் திமுக உறுப்பினா்கள், ஆதவரவாளா்களின் பெயா்கள் விடுபட்டுள்ளதா என்பதை கவனமாக பாா்க்க வேண்டும். ஏதேனும் பெயா்கள் விடுபட்டிருந்தால், மீண்டும் அவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டட திறப்பு விழாவுக்கு வரவுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவச்சிலை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளா்கள் பெருநற்கிள்ளி, தாமரைச்செல்வன், அன்பழகன், ஸ்ரீதா், தலைமை பொதுக்குழு உறுப்பினா் மணிமாறன், தெற்கு மாவட்ட அவைத்தலைவா் ராமமூா்த்தி, ஒன்றிய செயலாளா்கள், நகர செயலாளா்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். முடிவில் தெற்கு மாவட்ட துணை செயலாளா் காமராஜ் நன்றி கூறினாா்.