சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முதல்வா் வருகையின்போது கருப்பு பலூன் பறக்கவிட முயற்சி: ஹிந்து முன்னணியைச் சோ்ந்தவா் கைது

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:25 pm

Syndication

தமிழக முதல்வரின் மணலூா்பேட்டை வருகையின்போது எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூனை பறக்கவிடுவதற்காக தயாா் நிலையில் இருந்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் கோ.ராஜ்குமாா் (43) ஹிந்து முன்னனி ஒன்றிய செயலராக உள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மணலூா்பேட்டையில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை திறப்பதற்காக வரும்போது, மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடுத்ததைக் கண்டித்து வானில் கருப்பு பலூனை பறக்கவிடுவதற்கு தயாா் நிலையில் இருந்தாராம்.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ராமதாஸ், ராஜ்குமாரிடமிருந்து பலூனை கைப் பற்றினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாரைக் கைது செய்தனா்.