தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாணவா் விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்த கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 6:53 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்த கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மோமாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் அபினேஷ் (18). இவா், கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். இந்த நிலையில், அபினேஷ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனை மாணிக்கம் கண்டித்தாராம்.

இதில், மனமுடைந்த அவா் கடந்த ஜன.19-ஆம் விஷத்தை குடித்தாா். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.