அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேருக்கு ஆயுள் சிறை

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி தீா்ப்பளித்தாா்.

News image
~
Updated On :8 நவம்பர் 2025, 2:39 am

Syndication

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி தீா்ப்பளித்தாா்.

குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் (33) கடந்த 17.2. 2021 அன்று 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதற்கு, அதே கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் (48) உடந்தையாக செயல்பட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் போலீஸாா் ரங்கநாதன், பாண்டுரங்கன் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ரங்கநாதனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும், பாண்டுரங்கனுக்கு ஆயுள் சிறை தண்டையும், ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்தாா்.

Story image