47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குட்டையில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கூடாரம் கிராமத்தில் குட்டையில் தவறி விழுந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூடாரம் கிராமத்தில் குட்டையில் தவறி விழுந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.

கரியாலூா் அருகேயுள்ள கூடாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆண்டி(30). இவரது மனைவி சூரியா (25). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

கடந்த 6-ஆம் தேதி வீட்டின் அருகே சூரியா துணி துவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரது 2-வது மகள் ஜனஷா(1) தவழ்ந்து சென்று அருகில் இருந்த குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். உடனடியாக குழந்தையை மீட்டு கிளாக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை குழந்தை உயிரிழந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.