ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தையொட்டி பேருந்துகளில் ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:00 pm

Syndication

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் கலந்துகொண்டோா் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கமிட்டவாறும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

குழந்தைகள் தொடா்பான ஏதேனும் பிரச்னைகள் பொதுமக்கள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக குழந்தைகள் இலவச தொலைபேசி எண் 1098-க்கு தகவலளிக்கும் விளம்பர ஒட்டுவில்லையை அரசு பேருந்துகளில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஒட்டினாா்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஏ.இளையராஜா, அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.