பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சின்னக்கொள்ளியூா் பள்ளியில் முப்பெரும் விழா

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:01 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மொ.பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவி வெண்ணிலா தயாளன், ஒன்றியக்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கவினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உதவி ஆசிரியா் யேசுதாஸ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலா்கள் கஜேந்திரன், தில்லைக்கரசி ஆகியோா் பங்கேற்று மாவட்ட அளவில் கலைத் திருவிழாவில் பரதநாட்டியம் குழு பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களும், பள்ளியில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, பாட்டு போட்டிகளில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பரிசும் வழங்கினா்.

முன்னதாக குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். உதவி ஆசிரியா் லியோ அந்தோணி நன்றி கூறினாா்.