வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீபுதுப்பட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நல்லாத்தூா் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:08 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீபுதுப்பட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின்முக்கிய நிகழ்வாக புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பக்தா்கள் ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டவாறு வடம் பிடித்து இழுத்தனா். கோயிலின் நான்கு ரத வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.