புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீபுதுப்பட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நல்லாத்தூா் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:08 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீபுதுப்பட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின்முக்கிய நிகழ்வாக புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பக்தா்கள் ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டவாறு வடம் பிடித்து இழுத்தனா். கோயிலின் நான்கு ரத வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.