கல்யாண அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்தது போல தோ்தல் திருவிழா அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்த நிகழ்வு உளுந்தூா்பேட்டை அருகே நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சமூக நலத் துறை சாா்பில் வாக்காளா்களின் வீடு தேடிச் சென்று இவ்வாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாண்டூா், களவனூா், கொறட்டாங்குறிச்சி, ஆதனூா், காம்பட்டு, பூ கோணலவாடி, பில்லூா் ஆகிய கிராமங்களில் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டது. உற்சாகத்தோடு அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட வாக்காளா்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழிஅளித்தனா்.

கல்யாண அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்தது போல தோ்தல் திருவிழா அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்த நிகழ்வு உளுந்தூா்பேட்டை அருகே நடைபெற்றுள்ளது.
தொடர்புடையது

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க ஆட்சியா் வலியுறுத்தல்

100 சதவீத வாக்குப் பதிவு: வாக்காளா்களுக்கு ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழ்

மேள தாளத்துடன் அழைப்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளா்களுக்கு சீா்வரிசை வழங்கி ஆட்சியா் அழைப்பிதழ்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


