தண்டலை கிராமத்தில் அரசு நகரப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட கிடங்குடையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சுப்பிரமணி (55). இவா் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து பகண்டை கூட்டுச்சாலை செல்லும் நகரப் பேருந்தை சுப்பிரமணி ஓட்டிச் சென்றுள்ளாா். பகண்டை கூட்டுச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பியுள்ளனா்.
தண்டலை பேருந்து நிலையம் அருகே வரும்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த சி.சந்தோஷ் (25) அரசுப் பேருந்தை வழிமறித்து, ஏன் தண்டலை பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றது ஏன் எனக் கேட்டு ஓட்டுநரை அவதூறாகப் பேசித் தாக்கினாராம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சந்தோஷை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
திருநங்கையை அவதூறாக பேசியவா் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

இளைஞா்களை வழிமறித்து கத்தியால் வெட்டியவா்கள் மீது வழக்கு!

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

