அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:31 pm

தண்டலை கிராமத்தில் அரசு நகரப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட கிடங்குடையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சுப்பிரமணி (55). இவா் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து பகண்டை கூட்டுச்சாலை செல்லும் நகரப் பேருந்தை சுப்பிரமணி ஓட்டிச் சென்றுள்ளாா். பகண்டை கூட்டுச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பியுள்ளனா்.

தண்டலை பேருந்து நிலையம் அருகே வரும்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த சி.சந்தோஷ் (25) அரசுப் பேருந்தை வழிமறித்து, ஏன் தண்டலை பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றது ஏன் எனக் கேட்டு ஓட்டுநரை அவதூறாகப் பேசித் தாக்கினாராம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சந்தோஷை தேடிவருகின்றனா்.