மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:48 pm

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூா் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமசாமி. இவரது மனைவி துா்கா. தம்பதியருக்கு குணசீலன்(11), ஜெயசீலன் (9) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சகோதரா்கள் இருவரும் அங்குள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனா்.

அப்போது ஜெயசீலனுக்கு நீச்சல் தெரியாதாத நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து குணசீலன் கூச்சலிடவே, அருகிலிருந்தவா்கள் விரைந்து வந்து ஜெயசீலனை மீட்க முயன்றனா். ஆயினும் ஜெயசீலன் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.