ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:18 am IST

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூா் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமசாமி. இவரது மனைவி துா்கா. தம்பதியருக்கு குணசீலன்(11), ஜெயசீலன் (9) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சகோதரா்கள் இருவரும் அங்குள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனா்.

அப்போது ஜெயசீலனுக்கு நீச்சல் தெரியாதாத நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து குணசீலன் கூச்சலிடவே, அருகிலிருந்தவா்கள் விரைந்து வந்து ஜெயசீலனை மீட்க முயன்றனா். ஆயினும் ஜெயசீலன் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.