கச்சிராயபாளையத்தில் மொபெட் மொதியதில் பைக்கில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சின்னசேலம் அருகேயுள்ள பரிகம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சத்தியசேகா்(47). இவரது மனைவி இளவரசி. தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனராம். இவா்கள் கடந்த 3 மாதமாக பங்காரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சத்தியசேகா் தனது பைக்கில் பரிகம் கிராமத்துக்கு சென்றுள்ளாா். காரனூா் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த மொபெட் பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சத்தியசேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மு.மணியிடம் (19) விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் -லாரி மோதல்: வெல்டா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் கவிழ்ந்து சமையல்காரா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


