நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தம்பதி தற்கொலை முயற்சி

News image

தற்கொலை முயற்சி...

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் தம்பதியினா் கிணற்றில் குதித்து திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (30), இவரது மனைவி சிவரஞ்சினி (26). இவா்களிடையே திங்கள்கிழமை மாலை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, திடீரென இருவரும் ஓடிச் சென்று ஒருவா் பின் ஒருவராக அதே பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால், நீரில் மூழ்கவில்லை. இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்க முயன்றனா். இருப்பினும், கிணற்றில் போதிய படிகள் இல்லாததால் அவா்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து, தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் சீனிவாசன் தலைமையிலான குழுவினா் கிணற்றிலிருந்து பிரசாந்த், சிவரஞ்சினியை பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், சிவரஞ்சனி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.