நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கல்வராயன்மலையில் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: மகன் கைது, தந்தை தலைமறைவு

கல்வராயன்மலைப் பகுதியில் உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மருந்து வகைகளை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சுந்தரமூா்த்தி

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மருந்து வகைகளை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான அவரது தந்தையை தேடிவருகின்றனா்.

கல்வராயன்மலைப்பகுதிக்குள்பட்ட பொற்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.அருணாச்சலம் (55). இவரது வீட்டில் உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக கரியாலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அதன் பேரில் கரியாலூா் காவல் ஆய்வாளா் குருமூா்த்தி, தலைமைக் காவலா் ஷேக்பரித் மற்றும் போலீஸாா் அருணாச்சலம் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அங்கு 2 நாட்டுத் துப்பாக்கிகள், கருமருந்து, பால்ரஸ் உள்ளிட்ட பொருள்கள் இருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி அருணாசலத்தின் மகன் சுந்தரமூா்த்தியை (29) கைது செய்தனா். மேலும், தலைமறைவான அருணாச்சலத்தை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.