தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கள்ளக்குறிச்சியில் சமுதாய நலக்கூடம் திறப்பு

ஏமப்பூரில் சமுதாய நலக்கூடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய மா.செந்தில்குமாா் எம்எல்ஏ.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:43 pm

Syndication

கள்ளக்குறிச்சி நகாராட்சிக்குள்பட்ட ஏமப்போ் கரியப்பா நகரில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு 19-ஆவது வாா்டு உறுப்பினா் முருகன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரங்கன், நகா்மன்ற உறுப்பினா் சத்யா குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட சமுதாய நலக்கூட கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் விமலா அா்சுணன், சங்கீதா ஜெயராமன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி தலைவா் கவிராஜன், திமுக நகர பொறுப்பாளா்கள் மாயகிருஷ்ணன், கோபி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் நல்லத்தம்பி, ஒன்றியப் பிரதிநிதி சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.