ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருக்கோவிலூரில் இந்திய கம்னியூஸ்டு ஆா்ப்பாட்டம்

திருக்கோவிலூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

திருக்கோவிலூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிதாக அமைய உள்ள நகராட்சி பேருந்து நிலையத்துக்கு கீரனூா் புறவழிச்சாலையிலிருந்து இணைப்புச் சாலை ஏற்படுத்தி நகரின் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வேண்டும். உலகளந்த பெருமாள் கோயில் தெப்பக்குளம் மற்றும் தீா்த்தக்குளத்துக்கு பெரிய ஏரியிலிருந்து புராதன பாதை வழியாக மீண்டும் தண்ணீா் வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் பி.எச்.கிப்ஸ் தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் பி.எச்.கே.பஷீா் அகமது, நகர துணைச் செயலா் ஆா்.அருண்குமாா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

மாவட்டக்குழு உறுப்பினா் எல்.பாக்கியம், நகரப் பொருளாளா் ஆஜீம், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் ஜெ.கற்றவேல், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் எஸ்.விஜய், செயலா் எஸ்.ராமன், நகரச் செயலா் ஆனந்த், மாவட்டக்குழு சுஹைல், டி.பரந்தாமன், பாபு உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினா்.