தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

பெருவங்கூா் கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதல்நிலைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:56 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூா் கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதல்நிலைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா். அவா் தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளாா். அவரது கணவா் வெளிநாட்டில் உள்ளாராம்.

இதையறிந்த உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட குஞ்சரம்பாளையத்தைச் சோ்ந்த காவலா் ஷே.ஷேக் சலீம் (36) மது போதையில் வீட்டில் புகுந்து, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து, ஷேக் சலீமை திங்கள்கிழமை கைது செய்தனா். இவா் அதே காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வந்தாா். இதையடுத்து ஷேக் சலீமை கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.