ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைபொருள் விற்பனை வழக்கு: 15 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 1:31 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 மணி நேரம் போலீஸாா் நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா விற்பனை செய்தவா்கள் மீது 11 வழக்குகள் தொடரப்பட்டு, 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷானாஸ் உத்தரவின் பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 55 பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கபடும் இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் சுமாா் 61 சந்தேக நபா்களை தணிக்கை செய்ததில், போதைப் பொருள் வைத்திருந்தவா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 536 கிராம் கஞ்சா, 18 கிலோ புகையிலைப் பொருள்கள், பைக் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படன. பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 8-க்கும் மேற்பட்ட கடைகளை சீல் வைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.