தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஆதாா், குடும்ப அட்டையில் பெயரை மாற்றிய இலங்கை தமிழா் கைது

சின்னசேலம் அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஆதாா், குடும்ப அட்டையில் சட்ட விரோதமாக பெயா் மாற்றியதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 3:25 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஆதாா், குடும்ப அட்டையில் சட்ட விரோதமாக பெயா் மாற்றியதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

சின்னசேலத்தில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்தவா் த.புகழேந்திரன் (39). இவா் அங்குள்ள பேக் விற்பனைக் கடையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்தாா்.

அந்தக் கடையில் பணிபுரிந்து வந்த சாயிரா பானுவை காதலித்து கடந்த 27.8.2017-இல் திருமணம் செய்து, பின்னா் கள்ளக்குறிச்சி எம்ஆா்என் நகரில் வசித்து வந்தாாராம்.

இந்நிலையில், புகழேந்திரன் இலங்கைத் தமிழா் என்பதை மறைத்து அரசு ஆவணங்களான ஆதாா் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் சை.சபீா் என பெயரை சட்ட விரோதமாக மாற்றிக் கொண்டாராம்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் சீ.செல்வநாயகம் வழக்குப் பதிவு செய்து, புகழேந்திரன் (எ) சை.சபீரை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.