மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பைக் மீது பொக்லைன் மோதல்: அரசு அலுவலா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பொக்லைன் இயந்திரம் மோதியதில் பைக்கில் சென்ற அரசு அலுவலா் காயமடைந்தாா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 3:25 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பொக்லைன் இயந்திரம் மோதியதில் பைக்கில் சென்ற அரசு அலுவலா் காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.ராமகிருஷ்ணன் (40). இவா், ஸ்ரீபெரும்புதூா் சிப்காட்டில் நில அளவுப் பிரிவில் துணை வட்ட ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை ராமகிருஷ்ணன் தனது பைக்கில் மாடூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தாரம்.

மாடூா் பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் வந்த பொக்லைன் இயந்திரம் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் ஓட்டுநா் வே.வேல்மணியிடம் (40) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.